Header Ads



விமான நிலைய வரலாற்றில் பாரிய, போதைப்பொருள் மீட்பு - 436 மில்லியன் பெறுமதி


கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வரலாற்றில் மிகப் பாரிய அளவான குஷ் போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.


ரூ. 43 கோடியே 64 இலட்சத்து 80 ஆயிரம் (ரூ. 436.48 மில்லியன்) பெறுமதியான குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த பயணியை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


குறித்த நபர் 21 வயதான பிரிட்டிஷ் தேசிய பாதுகாப்பு சேவை அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.


சந்தேகநபர் இன்று (26) மு.ப. 9.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-403) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.


கட்டுநாயக்கா விமான நிலையத்தின் விரைவான வெளியேறும் பகுதியான கிரீன் சேனல் ஊடாக வெளியேறுவதற்காக வந்திருந்த குறித்த நபரின் வழக்கத்திற்கு மாறான நடத்தையை அவதானித்த விமான நிலைய சுங்க அதிகாரிகள், குறித்த நபரிடமிருந்த இரண்டு பயணப் பெட்டிடிகளைள சோதனை செய்த போது, இவ்வாறு பாரியளவான ‘குஷ்’ போதைப் பொருளை மீட்டுள்ளதோடு, சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.


இவ்வாறு மீட்கப்பட்ட குஷ் போதைப்பொருளின் நிறை, 43.648 கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


மேலதிக விசாரணைகளுக்காக குறித்த குஷ் போதைப்பொருளுடன் குறித்த பிரித்தானிய பிரஜையை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இந்த நபரை உடனடியாக Criminal Investigation Special Unit ஒப்படைத்து பிரிட்டிஷ் இல் இருந்து இலங்கையுடன் உள்ள சரியான Network உள்ள நபர்களையும் உடனடியாக கைது செய்து அந்த குஷ் போதைப் பொருளை இந்த நபர் உற்பட அனைவரின் உடம்பில் போட்டு தீயிட்டு கொழுத்து அத்தனை பேரையும் அழித்து விடுவதைத் தவிர இந்த போதைப் பொருள் பிரச்சினைக்கு வேறு எந்தத் தீர்வும் கிடையாது என்பதை அரசாங்கம் நன்றாக நினைவில் வைத்து செயற்பட வேண்டும். இது தவிர வேறு எந்த நடவடிக்கை எடுத்தாலும் இந்த பாரிய ஆபத்தில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றவே முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.