Header Ads



காற்சட்டையில் 3 கோடி ரூபா பெறுமதியான தங்கம்


சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரிடம் இருந்து 1 கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் மேலும் 3 தங்க பிஸ்கட்டு துண்டுகளும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே கைது செய்யப்பட்டதாக "அத தெரண" விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.