Header Ads



மர்ஹூம் KA பாயிசின் மருமகன், றிசாத்துடன் இணைவு


புத்தளம் முன்னாள் நகரபிதாவும் முன்னாள் பிரதி அமைச்சருமான மர்ஹூம் கே.ஏ.பாயிஸின் மருமகன் (மகளின் கணவன்) எம்.என்.எம்.நஸ்ரக் நேற்றைய தினம் (15) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.


இதன்போது கருத்து தெரிவித்த அவர், புத்தளம் மாவட்ட மக்களின் நன்மை கருதியும், தமது ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு அமையவுமே இந்த முடிவை தாம் எடுத்ததாகவும் தெரிவித்தார்.


சிறுபான்மை மக்களில் கரிசனைகொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உழைத்து வருவதை தாம் உணர்ந்துள்ளதாகவும் எதிர்காலத்தில், கட்சியையும் தலைமையையும் பலப்படுத்த தன்னாலான முழு முயற்சியையும் மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.


தற்போதைய காலகட்டத்தில், இவ்வாறான கட்சி ஒன்றே நமது சமூகத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.