Header Ads



JVP யின் முன்னாள் Mp, பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டி


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சிறிபால அமரசிங்க கட்டுப்பணத்தை திங்கள்கிழமை  (5) காலை வைப்பிலிட்டுள்ளார்.


இவர், மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.


ஐக்கிய தொழிற்சங்க மையத்தின் சார்பில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.


இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பணத்தை வைப்பிலிட்ட 15ஆவது நபரான  அமரசிங்க,  ஆறாவது சுயேச்சை வேட்பாளரும் ஆவார்.


2


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் அவரது சார்பாக திங்கட்கிழமை (05) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.