Header Ads



பண்டாரிகொட, ஹிருனிக்கா வருகிறார்கள்


காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார் எம்.பி பதவியில் இருந்துநீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமான பதவிக்கு  பந்துலால் பண்டாரிகொடவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்மொழிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.


உயர்நீதிமன்றம், வௌ்ளிக்கிழமை (09) வழங்கிய தீர்ப்பின்படி,  மனுஷ நாணயக்கார எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


 காலி மாவட்ட பட்டியலில் மனுஷ நாணயகாரவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பந்துலால் பண்டாரிகொட பெற்றிருந்தார்.


அதேவேளை ஹரீனின்  தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்கு ஹிருனிக்கா நியமிக்கப்படலாமென சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.