Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டாளர்கள், ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பர் - முபீன்


கொழும்பு 07 பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் செயலாளர் யு. எல். எம். என். முபீன் தெரிவித்த கருத்துக்கள்.


மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டாளர்கள் பலரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பர். கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும்.


இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நாட்டு மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். அன்றிருந்த நிலையை விடவும் இன்றைய நிலைமை நல்லதாகவே உள்ளது. 

 

அதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த பயணம் தடைப்பட்டால் நாடு மீண்டும் சரிவடையும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் பொருளாதாரம் , சமூக பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட தலைவர்.  அவருக்கு சரியான அரசியல் நோக்கம் இருப்பதால் அவருக்கு நாம் ஆதரவளிப்போம். ஜனாதிபதியின் வெற்றிக்கும் வழி செய்வோம்.“ என்றார். 


ஊடகப் பிரிவு

Ranil 2024 

21-08-2024


No comments

Powered by Blogger.