Header Ads



கண்டியில் சிறுத்தைப் புலி - அச்சத்தில் பதியபெலெல்ல மக்கள்


- TM- 


கண்டி, பதியபெலெல்ல நுகாய பிரதேசத்தில் சிறுத்தைப் புலியொன்று நடமாடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கிராமத்தின் மேல் உள்ள காப்புக்காடு பகுதியில் இருந்து மாலை நேரத்தில் கிராமத்திற்கு வரம் பெரிய சிறுத்தைப் புலி கடந்த சில நாட்களாக வீடுகளில் வளர்க்கப்படும் நாய், மாடு போன்ற விலங்குகளை பிடித்து உண்பது வழக்கமாகிவிட்டது. மான் போன்ற விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் கிராம மக்கள் பார்த்துள்ளனர்.


இது தொடர்பில் பொலிஸ் மற்றும் வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


இப்பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராம மக்களும், அவர்களது குழந்தைகளும் கடும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பதால், அப்பகுதியில் உள்ள அனைவரும்  அச்சத்தில் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.