Header Ads



இவர்களைக் கண்டால், உடனே அறிவிக்கவும்


துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கமுனுபுர பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் T56 துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.


இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட ஸ்ரீபுர பொலிஸாரால் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்கள் அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர்.


மேலும் புகைப்படத்தில் உள்ள சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


அவிசாவளையில் வசிக்கும் கயான் சுகததாச என்ற சந்தேகநபர் , 850220751V, 198502200751 என்ற தேசிய அடையாள அட்டையைக் கொண்டுள்ளார்.


இவரைப்பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 859 1181 என்ற எண்ணிற்கு உடனடியான அறிவிக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் உதவிகோரியுள்ளனர்.


No comments

Powered by Blogger.