Header Ads



மகிந்தவுக்கு மரியாதை செலுத்த, நாமலுக்கு வாக்களிக்கவும்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


அம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் மகிந்த ராஜபக்ச என்பதோடு அவர் இந்த நாட்டில் பல அபிவிருத்திப் பணிகளைச் செய்துள்ளார்.


எனவே, மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியக்குமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நாட்டைச் சூறையாடி,​இந்த நாட்டு மக்களையும் நாட்டையும் படுகுழியில் தள்ளவிட்ட இந்த கள்ளக்கூட்டத்துக்கு வாக்களிப்பதா இல்லையா என்பதை பொதுமக்கள் நன்றாகச் சிந்தித்து வாக்களிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.