Header Ads



மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தை சந்திக்கும் பொன்சேக்கா



ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம் நுவரெலியா பிரதான நகர் பகுதியில் வாகனத்தரிப்பிடத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்றது. 


தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்ட மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்துள்ளதோடு மேலும் மேடையின் முன் போடப்பட்டிருந்த இருக்கைகளில் எதிர்பார்த்த அளவில் பொது மக்கள் வருகைத்தந்து அமரவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. 


அத்துடன் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது அதன் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களும் குறித்த இடத்தில் காணப்பட்டது.


எனினும் குறித்து கூட்டத்தின் போது ஏராளமான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் மக்கள் வருகை தராதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.