Header Ads



ரணிலுக்கு முதல் தடவையாக ஆதரவளிக்க தீர்மானித்தேன் - முஸம்மில்


குருநாகலில் இன்று (30) நடைபெற்ற ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் விசேட  மாநாட்டில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் உரை


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முதல் தடவையாக ஆதரவளிக்க தீர்மானித்தோம். நாம் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ சிறந்த பொருளாதாரம் கொண்ட நாடு வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக கனவு காண்பதன் மூலம் வலுவான பொருளாதாரம் கொண்ட நாட்டை கட்டியெழுப்ப முடியாது. 


இன்று பங்களாதேஷுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 இல் முன்வராவிட்டால், போராட்டக்காரர்கள் எமது பாராளுமன்றத்தை தாக்கி நாட்டை அராஜக நிலைக்குத் தள்ளுவார்கள். 


மற்றொரு பங்களாதேஷாக இருக்க வேண்டிய நாட்டை பொருளாதார ரீதியாக பலப்படுத்தியதற்காக ஜனாதிபதிக்கு எமது நன்றியை தெரிவிக்க வேண்டும். 


எனவே இம்முறை சிலிண்டர் சின்னத்திற்கு  வாக்களித்து மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வோம்" என்றார்.


இராஜாங்க அமைச்சர்களான டி.பி.ஹேரத், சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி தவிசாளர் அல்பிரட் ராமநாயக்க, முன்னாள் அமைச்சர்களான அகிலவிராஜ் காரியவசம், எஸ்.பி.நாவின்ன  உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


ஊடகப் பிரிவு

30-08-2024 

No comments

Powered by Blogger.