Header Ads



இலங்கையர்களுடன் பிரிட்டன் நோக்கிச் சென்ற படகு விபத்து

 
பிரித்தானியா நோக்கி சென்ற சொகுசு படகொன்று கடலில் மூழ்கி விபத்துள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.


குறித்த படகில் இலங்கையர்கள் உட்பட 22 வெளிநாட்டவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்தின் போது, படகில் பயணித்த பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 06 பேர் காணாமல் போயுள்ளனர்.


படகிலிருந்த பயணிகளைக் காப்பாற்றும் பணிகளில் கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.