Header Ads



யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் ஜனாஸா உறவினர்களிடம் கையளிப்பு


- பாறுக் ஷிஹான் -


மணல்  அகழ்வு வேலைக்கு சென்ற நிலையில்   யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம்  நிந்தவூர்   பொலிஸ் பிரிவிற்குட்பட்டதும் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்டதுமான   அல்லிமூலை மல்கம்பட்டி வயல் பிரதேசத்தில்  செவ்வாய்க்கிழமை(20) அதிகாலை இடம்பெற்றிருந்ததுடன் மாலை யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவ இடத்தில் நிந்தவூர் 21 ஆம் பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான   55 வயது மதிக்கத்தக்க  ஆதம்பாவா நவாசிம் என்ற  குடும்பஸ்தரே   உயிரிழந்தவராவார்.


மேலும்    சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில்  சம்மாந்துறை பிரதேசத்தில்  யானை தாக்குதலுக்கு இலக்காகி  பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது  வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.