போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் - முறைப்பாடு செய்ய வேண்டுகோள்
நகரப் போக்குவரத்துப் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நகரப் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, 011 243 3333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் அறிவிக்க முடியும். நகர போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்ட புறக்கோட்டை, கோட்டை, மருதானை உள்ளிட்ட 53 பொலிஸ் நிலையங்களை மையமாகக் கொண்டதாகும்.
அதேவேளை வத்தளை பிரதேசத்தில் டிப்பர் வாகனத்தின் சக்கரத்தில் காற்றினை வெளியிட்ட பொலிஸ் அதிகாரியின் செயற்பாட்டுக்கு அப்பால் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment