Header Ads



ஷகிப் அல் ஹசன் மீது, கொலைக் குற்றச்சாட்டு


பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பங்களாதேஷ் கிரிக்கெட்  அணியின் சிரேஷ்ட வீரருமான ஷகிப் அல் ஹசன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


பங்களாதேஷ் அரசுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் 7ஆம் திகதி நடந்த போராட்டத்தில் ரூபால் இஸ்லாம் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் மீது இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இளைஞரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியல் வௌியிடப்பட்டுள்ள நிலையில், அதில் ஷகிப் அல் ஹசனின் பெயரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.