Header Ads



அரகலய போராட்ட சூத்திரதாரிகளில் ரணிலும் ஒருவர் - நாமல்


அரகலய போராட்டத்தை நிர்மாணித்தவர்களில் ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவும் ஒருவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


“சிஸ்டம் ச்சேஞ்ச்” என்ற முறைமை மாற்றத்தைக் கோரி போராடிய இளைஞர்கள் இன்னும் வீதிகளிலேயே இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நாமல், 


“அரகலயவில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள்.


அவரது செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அவரும் அரகலய போராட்டத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனவே நிரூபணமாகிறது.


போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்காகச் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் இருக்கின்றன


அவற்றை நடைமுறைப்படுத்துவதாற்கான திட்டமிடல்கள் எம்மிடம் உள்ளன.” என நாமல் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.