இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்களின் அவசரக் கூட்டம் சவுதி அரேபியாவில் புதன்கிழமை (06) நடைபெற உள்ளது.
ஜெட்டாவில் நடைபெறும் கூட்டத்தில் 'இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் குற்றங்கள்' மற்றும் 'படுகொலை' பற்றிய விவாதங்கள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் உள்ளூர், வௌியூர், சர்வதேச நிறுவனங்களுக்கு ஏதோ ஒருவகையில் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர்களின் செயல்பாடுகள், தீர்மானங்களுக்கும் ஒரு அங்கீகாரமும், செவிசாய்ப்புகளும் உண்டு. ஆனால் முஸ்லிம்களின் நிலத்தை பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்டு, வெறும் 60 இலட்சம் பேரைக் கொண்ட இஸ்ரவேல், அந்த நாட்டின் சொந்தக்காரர்களாகிய பலஸ்தீன அப்பாவி மக்களை அநியாயமாகக் கொலை செய்து, அவர்களின் குழந்தைகள், பிள்ளைகள், தாய்மார்கள், வயோதிபர்கள், வளர்ந்தவர்கள், இளைஞர்கள் என தராதரம் பார்க்காது மிக மோசமாக மிகவும் கீழ்த்தரமான முறையில் படுகொலை செய்து வரும் போது இஸ்ரவேலைச் சூழ உள்ள வாழும் 400 இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 க்கும் மேற்பட்ட அரபு முஸ்லிம் நாடுகளை உள்வாங்கிய இஸ்லாமிய நாடுகள் ஒன்றியம் OIC தங்கள் இரத்த உறவுகள் அநியாயமாகப் படுகொலை செய்யப்படும் போது கண்மூடி,வாய்மூடி, மௌனமாக அவர்களின் உல்லாச,ஆரம்பர வாழ்க்கையில் மூழ்கி வேறு தங்கள் இரத்த உறவுகள் பசியாலும், கைகால்களை இழந்து, கடுமையாக காயப்பட்டும் பட்டினியாலும் குடிக்க நீர் இன்றி அவலப்பட்டு துடிக்கும் போது கொலைகார காபிர்களுக்கு உணவு, அத்தியாவசிய தேவைகளை சப்ளை பண்ண 100% முஸ்லிம்களைக் கொண்ட முஸ்லிம் அரபு நாடுகள் இஸ்ரவேலுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றன. இதைவிடக் கேவலமும் அவமானமும் இழிவும் வேறு கிடையாது. இந்த நிறுவனம் தான் இந்த அத்தனை முனாபிக், முஜ்ரிமீன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இது போன்ற நிறுவனங்கள் இருப்பதைவிட இல்லாது இருந்தால் ஓரளவு இல்லை என்ற நிலையாவது இருக்கும்.
ReplyDelete