Header Ads



யானையின் தாக்குதலில் ஒருவர் வபாத்

-


பாறுக் ஷிஹான் -


யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு


வயல்   வேலைக்கு சென்ற நிலையில்   யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின்  சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம்  நிந்தவூர்   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில்  கடந்த புதக்கிழமை (28)  காலை 8.45 மணியளவில் இச்சம்பவம்   இடம்பெற்றிருந்ததுடன் பாதை ஊடாக பயணித்த நிலையில் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின்  சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவ இடத்தில்  நிந்தவூர் - 02 இரண்டாம் குறுக்குத் தெரு பிரிவை சேர்ந்த திருமணமாகாத   62 வயது மதிக்கத்தக்க  மீராலெப்பை முகம்மது முஸ்தபா என்ற  நபரே   உயிரிழந்தவராவார்.


மேலும்    சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.