Header Ads



நிபந்தனையுடன் சஜித்திற்கு ஆதரவு - தம்மரத்ன தேரர்

எதிர்வரும் ஜனாதிபதித்


தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குவதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம பீடாதிபதி வலஹகுணவெவ தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 


பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், தற்போதைய அரசாங்கத்தையும் எதிர்க்கட்சித் தலைவரையும் கடுமையாக விமர்சித்து வரும் தம்மரதன தேரர், தனது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். 


“பொதுமக்களுக்கு இந்த முடிவைத் தெரிவித்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அவர் நமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நிபந்தனையுடன் தான் இந்த ஆதரவு வழங்கப்பட வேண்டும். இந்த தலைவருக்கு அதிகாரத்தைக் கொடுத்து அவரைப் பணிபுரிய வைப்போம்” என தம்மரதன தேரர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.