Header Ads



பங்களாதேசில் நீதிபதிகள் பதவி விலக மாணவர்களினால் காலக்கெடு


பங்களாதேசில் கடந்த இரண்டு நாட்கள் அமைதி நிலவிய நிலையில் மாணவ அமைப்புகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கின. அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் வங்கதேச உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தலைமை நீதிபதி பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதித்தனர். பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் முடிவடைந்த நிலையில், நீதிபதிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது வங்கதேசத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், அந்நாட்டின் தலைமை நீதிபதி ஓ பைதுல் அசன் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக பங்களாதேசின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.S

No comments

Powered by Blogger.