Header Ads



குழந்தையையும், தாயையும் இழந்த ஆசிரியை - ஜனா­ஸாக்கள் பெருந்­தி­ர­ளா­னோர் முன்­ நல்­ல­டக்கம்


எதிர்­பா­ராத திடீர் நிகழ்­வுகள் வாழ்க்கைச் சக்­க­ரத்தை மாற்றி விடு­கின்­றன. இந்­நி­கழ்­வு­களும் அத­னை­யொட்­டிய வாழ்க்கை மாற்­றங்­களும் வாழ்க்கை பற்­றிய புரி­தலை மட்­டு­மன்றி இறை நிய­தி­யையும் உணர்த்தி நிற்­கின்­றன.

தனது 4 ½ மாத குழந்­தையின் நல­னுக்­காக பாட­சாலை இட­மாற்­ற­மொன்றைப் பெற்றுக் கொள்ளச் சென்ற ஆசி­ரி­யை­யொ­ருவர் அன்புக் குழந்­தையை மட்­டு­மன்றி தனது அன்புத் தாயையும் பறி­கொ­டுத்த பரி­தாப சம்­ப­வ­மொன்று கடந்த திங்­கட்­கி­ழமை கெலி­ஓயா பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது.


புசல்­லாவ நகரில் பிர­சித்தி பெற்ற புசல்­லாவ தேசிய பாட­சா­லையில் பல வரு­டங்கள் ஆசி­ரி­யை­யாகப் பணி­யாற்றும் கெலி­ஓயா முறுத்­த­க­ஹ­மு­ளயைச் சேர்ந்த ஆசி­ரியை அரு­கி­லுள்ள கம்­பளை சாஹிரா கல்­லூ­ரிக்கு தற்­கா­லிக இட­மாற்­ற­மொன்றை எதிர்­பார்த்­துள்ளார். இவர் தனது 4 ½ மாத குழந்­தையின் பரா­ம­ரிப்பைக் கருத்திற் கொண்டு இவ்­வி­ட­மாற்­றத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­துள்ளார்.


இந்த இட­மாற்றம் தான் கட­மை­யாற்­று­வது தேசிய பாட­சாலை என்­பதால் கொழும்­பி­லுள்ள கல்வி அமைச்சில் சென்று தேவை­யான விட­யங்­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. இதனால், இவர் கடந்த 12 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை அதி­காலை 4.30 மணி­ய­ளவில் துணைக்கு தனது தாயார் மற்றும் சகோ­தரி உட்­பட இரு குழந்­தை­க­ளுடன் முச்­சக்­க­ர­வண்­டி­யொன்றை வாட­கைக்கு அமர்த்தி கொழும்பு நோக்கி சென்­றுள்­ளனர்.


அன்­றைய தினம், கல்வி அமைச்சில் மேற்­கொள்ள வேண்­டிய பணி­களை முடித்துக் கொண்டு அங்­கி­ருந்து 11.30 மணி­ய­ளவில் திரும்­பி­யுள்­ளனர். இவர்கள், பய­ணத்தை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பிக் கொண்­டி­ருந்த போது, பிற்­பகல் 1.30 மணி­ய­ளவில் கொழும்பு – கண்டி பிர­தான வீதியில் வேவல்­தெ­னிய பகு­தியில் முச்­சக்­க­ர­வண்டி கட்­டுப்­பாட்டை இழந்த நிலையில் பிர­தான பாதையை விட்டு விலகி முன்னால் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த லொறியின் பின்­பக்­கத்தில் முட்டி மோதி விபத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளது. இதில் படு­கா­ய­ம­டைந்த சாரதி உட்­பட அனை­வரும் பிர­தே­ச­வா­சி­களால் மீட்­கப்­பட்டு வரக்­கா­பொல போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.


இதில் இந்த ஆசி­ரி­யையின் தாயார் மற்றும் அவரின் 4½ மாத குழந்தை அஹமட் ரிப்னாஸ் மற்றும் முச்­சக்­கர வண்­டியின் சாரதி முஹம்மத் நஸார் (வயது 60) ஆகியோர் வரக்­கா­பொல போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்பு சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ளனர். 


இதில் காய­ம­டைந்த அஹமட் ரினாஸ் மற்றும் ஆசி­ரி­யையின் சகோ­தரி ஆகியோர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பப்­பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். மேலும், காய­ம­டைந்த ஆசி­ரியை எம்.எப். ஷர்­மிளா வரக்­கா­பொல போதனா வைத்­தி­ய­சா­லையில் இருந்து கண்டி போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வதும் குறிப்­பி­டத்­தக்­கது.


“முச்­சக்­க­ர­வண்டி வேக­மாக வந்து கட்­டுப்­பாட்டை இழந்த நிலையில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த லொறியின் பின்­ப­கு­தியில் மோதி விபத்­திற்­குள்­ளா­கி­யது. நாம் ஓடிச் சென்று பார்த்தோம். இரத்த வெள்­ளத்தில் இருந்த அனை­வ­ரையும் வெளியே எடுத்து வரக்­கா­பொல போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல உத­வினோம்” என்று இவ்­வி­பத்து சம்­ப­வத்தை நேரில் கண்ட பிர­தே­ச­வா­சி­யொ­ருவர் தெரி­வித்தார்.


இவ்­வி­பத்தில் உயி­ரி­ழந்த குழந்­தையின் ஜனாஸா செவ்­வாய்க்­கி­ழமை காலையும் ஏனைய இரு­வரின் ஜனா­ஸாக்கள் செவ்­வாய்க்­கி­ழமை இரவும் உடு­நு­வர வர­ஹந்­தெ­னிய ஜும்ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டியில் பெருந்­தி­ர­ளா­னோரின் முன்­னி­லையில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன.


இவ்­வி­பத்து தொடர்­பான விசா­ர­னை­களை வரக்­கா­பொல பொலிஸார் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

No comments

Powered by Blogger.