கொழும்புக்கு வந்துள்ள சீன, இந்திய போர்க் கப்பல்கள்
சீனாவின் 3 போர் கப்பல்கள் இன்று(26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இருநாட்டு கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.
குறித்த 3 கப்பல்களும் எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளன.
2
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS மும்பை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து விமானத்திற்கு தேவையான அத்தியாவசிய உதிரிப்பாகங்கள் INS மும்பை போர்க்கப்பலில் கொண்டு வரப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
INS மும்பை போர்க்கப்பல் எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது.
Post a Comment