Header Ads



முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கும் ரணில்


கொரோனா காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்தவதில், ஏற்பட்ட பிரச்சினைக்காக முஸ்லிம் மக்களிடம், பகிரங்கமாக மன்னிப்பு கோருதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கா தெரிவித்துள்ளார்.


காத்தான்குடி பிரதேசத்தில் 31-08-2024 மாலை நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா'- வெற்றி பேரணியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


தனிநபர் விருப்பத்தின் அடிப்படையில் அடக்கம், தகனம் செய்வதற்கான சட்டமொன்றை கொண்டு வருவதாகவும், முஸ்லிம்களின் ஜனாசாக்களை தகனம் செய்யுமாறு அரசாங்கத்துக்கு அறிவுறுத்திய தரப்பினரை சார்ந்திருக்கும் பொறுப்புகளை தேடியறிந்து, இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடுகளை செலுத்தவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.