இந்தியாவில் அல்லது லண்டனில் ஹசீனா தஞ்சம்
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது.
பங்களாதேசிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் தப்பிய ஷேக் ஹசீனா, இந்தியாவை சென்றடைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிய நிலையில், அவர் அங்கிருந்து லண்டன் தப்பிச் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment