Header Ads



பெரமுனவின் எச்சரிக்கையும், ராஜாங்க அமைச்சரின் பதிலடியும்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.


பொதுஜன பெரமுனவின் கட்சியில் ஏகமனதாக எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை  அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொட்டு கட்சியின் குழுவொன்று தீர்மானித்துள்ளதாகவும், இதையடுத்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேற்குறித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, “எந்தக் கடிதம் அனுப்பினாலும் நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி இந்த நாட்டிற்கு ஆற்றிய சேவையின் காரணமாகவே நாங்கள் இந்த தீர்மானங்களை எடுத்துள்ளோம்” என்றார். 

No comments

Powered by Blogger.