Header Ads



மக்களின் துயரத்தைக் கண்டு, ரணில் ஒருவரின் மனம் தான் ஈரமானது


பிட்டகோட்டையில் அமைந்துள்ள சிறிகொத்தவில் இன்று பிற்பகல் (25) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தவை


''2020 தேர்தலில் மக்கள் உங்களை தோற்கடித்தனர். நாமும் ஐ.தே.கவில்  இருந்து விலகச் சென்றோம். பொதுத் தேர்தலில் தோற்றாலும் நாடுபூராவும் இருந்து பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியலின் ஊடாக நீங்கள் பாராளுமன்றத்திற்கு வந்தீர்கள். 


நாடு வீழ்ச்சியடைந்திருந்தது. பால்மா இன்றி, மருந்து இன்றி, கேஸ், எரிபொருள் இன்றி மக்கள் அவதிப்பட்டனர். கட்சித் தலைவர்களான சஜித், அநுர போன்றவர்களுக்கு  மக்களின் கஷ்டம் தெரியவில்லை. 


நாட்டு மக்களின் துயரத்தைக் கண்டு ரணில் விக்ரமசிங்க ஒருவரின் மனம் தான் ஈரமானது. அவர் 5 தடவைகள் பிரதமரானதோடு  ஒவ்வொரு தடவையும் நாட்டை கட்டியெழுப்பும் போதும் அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 


கடந்த 2 வருடங்களில் வீழ்ச்சியடைந்த நாட்டை அவர் மீட்டெடுத்தார். நாட்டின் நலனுக்காக அனைத்து ஆதரவாளர்களையும் இணைத்து வீடு வீடாகக் சென்று ஜனாதிபதியின் வெற்றியை பெருவெற்றியாக்குவோம்.'' என்றார்.

No comments

Powered by Blogger.