Header Ads



ரணில் ஜனாதிபதியாவது உறுதி - சஜித், அநுராவினால் அரசாங்கத்தைக் கூட அமைக்க முடியாது


இலங்கையில் 6 முறை பிரதமராகவும், ஒருமுறை ஜனாதிபதியாகவும் இருந்து அனுபவமும், அறிவும் உள்ள ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைவது உறுதியாகும் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்தார்.


அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது,


ஐக்கிய மக்கள் சக்தி மூலம், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 14 பேர் தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் உள்ளனர். சிலவேளை சஜித் அல்லது அநுரகுமார வெற்றி பெற்றால்கூட, அவர்களினாலும் ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியாது.


சஜித்திடம், 30 பேரும், அநுரகுமாரவிடம் ஒருவரும் தற்போது எம்.பி. ஆக உள்ளனர். இப்படியிருக்கையில் எப்படி அவர்களினால் ஜனாதிபதியாக முடியும்..? எப்படி அரசாங்கத்தை நிறுவ முடியும்..??


ரணில் விக்கிரமசிங்கவினால்தான் ஜனாதிபதியாகவும் முடியும். அரசாங்கத்தை அமைக்கவும் முடியும். ஒரேயொரு  எம்.பி. பதவியைப் பெற்றுக்கொண்டு, ஜனாதிபதியாகி, நாட்டைப் பொறுப்பேற்ற ரணிலினால் மட்டுமே, இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.


முஸ்லிம்கள்  தொடர்பில் ரணிலிடம் நான் முன்வைத்த  80 சதவீதமான கோரிக்கைகளை அவர் நிறைவேற்றியுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


கடந்த 2 வவருடங்களாக முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். இது தொடர வேண்டுமாயின், முஸ்லிம்கள்  ஒட்டுமொத்தமாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற்றச்செய்ய பங்களிப்புச் செய்ய வேண்டும்.

No comments

Powered by Blogger.