Header Ads



மஹிஷ் தீக்ஷனாவும், பாட்டியின் பங்களிப்பும்


சர்வதேச கிரிக்கட் களத்தில் தனது வெற்றிக்கு தனது பாட்டியே முக்கிய காரணம் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹிஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார்.


தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றிருக்கும் Cricinfo இணையத்தளத்துடனான கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


கலந்துரையாடலில் பாட்டியை பற்றி கேட்டபோது, ​​“அவர் எனக்காக எல்லாவற்றையும் செய்துள்ளார். சிலோன் பிரீமியர் லீக், இந்தியன் பிரீமியர் லீக் மட்டுமன்றி டுபாய், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விளையாடிய போட்டிகளை காணவும் பாட்டி வந்தார்.


அவர் கிரிக்கெட்டை நேசிக்கும் ஒருவர். கிரிக்கெட்டைப் பற்றி நல்ல அறிவை கொண்டுள்ளார். நான் நன்றாக விளையாடாதபோது, ​​​​அவர் குறைகளைக் கூறுவார். என் பின்னால் அவர் இருப்பது எனக்கு பெரிய பலம். அவரால் நான் இப்போது தொழில்முறை கிரிக்கெட் வீரராக இருக்கிறேன். அந்த மரியாதைக்கு அவர் தகுதியானவர்." என்று குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.