Header Ads



யாழ் - ஒஸ்மானியாவில், அபாபீல் உதவும் கரங்களின் நிகழ்வுகள் (படங்கள்)

அபாபில் உதவும் கரங்கள் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை, 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது.


ஒஸ்மானியா பாடசாலை அதிபர் என்.எம். ஸாபி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதீதியாக கவிஞர் யாழ் அஸீம் கலந்து கொண்டார்.


பிரதான உரையை அபாபீல் தலைவர் எம்.ஏ. சீ.எம். அமீன் நிகழ்த்தினார்.


அபாபில் உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகிகள், யாழ்ப்பாண முஸ்லிம் பிரமுகர்கள், அதிபர்கள், ஆசிரிர்கள, பொது மக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இதில் பங்கேற்றனர்.


க.பொ.த. உயர்தரத்தில் கற்கும் மாணவர்களை கௌரவித்தல்,  கடந்த காலங்களிலும், தற்போதும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்கும் ஆசிரியர்களை கௌரவித்தல் என பல்வேறு நிகழ்வுகள் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.


உறவுகளும், கல்விக்கும், அவசர நிலைகளில் கைகொடுப்போம் என்ற உன்னத  குறிக்கோளுடன் அபாபீல் உதவும் கரங்கள் செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.








No comments

Powered by Blogger.