Header Ads



ISIS பயங்கரவாதிகளின் போர், வீடியோக்களை பரப்பிய இளைஞன் கைது


ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் போர் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாக கைது செய்யப்பட்ட இளைஞரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று (28ம் திகதி) அனுமதி வழங்கியுள்ளது.


இம்மாதம் 22ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரத்மலானை 05ஆம் லேன் இரத்மலானை பொருபன வீதியை சேர்ந்த இமாட் ஷமாம் என்ற சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை நடத்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க அனுமதியளித்தார்.


குறித்த சந்தேக நபரான ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய காணொளிகளை எடிட் செய்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் ஊடாக சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக நீதிமன்றில் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், இந்த சந்தேக நபரை ஐ.எஸ்.ஐ.எஸ். அந்த அமைப்பின் கொடிகளில் குறிப்பிடப்பட்ட சின்னங்கள் அடங்கிய மோதிரங்கள் அவரிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்த சந்தேகநபரின் தொடர்புடைய நடவடிக்கைகள் காரணமாக தீவிரவாத மற்றும் பயங்கரவாத சிந்தனைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சந்தேகநபரின் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்குமாறும் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


(தமிழ் மிரர்)


No comments

Powered by Blogger.