சஜித்தை சந்தித்தேனா..?
தாம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததாக ஜனாதிபதி ஆலோசகர் அஷு மாரசிங்க தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்ததாக ஜனாதிபதி ஆலோசகர் அஷு மாரசிங்க தெரிவித்த கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் அவர் , “எனக்கும் பிரேமதாசவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் அஷு மாரசிங்க கூறுவது முற்றிலும் பொய்யானது.
அத்தகைய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை, அவரைச் சந்திப்பதற்கு எனக்கு எந்த காரணமும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
Post a Comment