Header Ads



ஜனாதிபதியிடம் இருந்து சாணக்கியன் 60 கோடி ரூபாய் பெற்றாரா..?


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 60 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளார் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்  தெரிவித்துள்ளார்.


 மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (11.08.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தமிழரசு கட்சியின் அனுமதி இன்றியே சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலை செய்வேன் என்ற உத்தரவாதத்தை ரணிலுக்கு வழங்கி இருப்பதனால் தான் ஜனாதிபதி இவ்வளவு பாரிய தொகையை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், எதிர்வரும் தேர்தலுக்காக கட்சியின் முடிவின்றி இவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளவர் குறித்து மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.