30 ஆண்டுகாளாக சவூதியில் பணியாற்றியவவருக்கு இலங்கைத் தூதரகத்தினால் கௌரவம்
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சவூதி அல்மராய் பல்தேசிய பாலுற்பத்திக் கம்பனியில் தகவல் தொழில்நுட்ப வலைப்பின்னல் குழுத் தலைவராகப் பணியாற்றி விட்டு இராச்சியத்தை விட்டும் செல்கின்ற பாபா ஹிஷாம் சாஹிட் அவர்களை இலங்கைத் தூதரகம் கௌரவித்தது. ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தில் கடந்த ஜூலை 30ஆம் திகதி நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றின் போது இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
சவுதி அரேபியாவில் நீண்டகாலமாக சேவையாற்றிய இலங்கைப் பணியாளர்களை கௌரவிக்கும் பாரம்பரியம் 2024 - ஜூலை முதல் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவதாக கௌரவிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர் ஹிஷாம் சாஹிட் ஆவார்.
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் , தாய் நாட்டினதும், தான் பணிசெய்த நாட்டினதும் நலனுக்காக தனது நீண்டகால சேவையின் மூலம் பங்களிப்புச் செய்த ஹிஷாம் சாஹிட் அவர்களுக்கு நன்றி பாராட்டு முகமாக நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கிவைத்தார்.
Post a Comment