Header Ads



நெருங்கிய நண்பரின் 2 1/2 வயது மகள் மீது பாலியல் வன்முறை



தனது நெருங்கிய நண்பரின் 2 1/2 வயது மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய 40 வயதான சந்தேகநபர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.


அலுபோமுல்ல மூன்னவத்த பிரதேசத்தில் பொழுது போக்கிதற்காக சிறுமியின் தந்தை தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் தனது நண்பனையும், அவரது மனைவி 2 பிள்ளைகளையும் நேற்று முன்தினம் அழைத்து சென்றுள் ளார்.


இச்சந்தர்ப்பத்தில் அனைவரும் வாகனத்தில் இருந்து இறங்கி புகைப்படம் எடுக்கச் சென்ற போது சிறுமி வாகனத்தில் உறங்கியுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டுத் தந்தை வந்தபோது நண்பரான சந்தேகநபர் குழந்தையை தான் வாகனத்தில் பார்த்துக் கொள்வதாகவும், எல்லோரும் போய் புகைப்படம் எடுத்து விட்டு வருமாறும் சந்தேகநபர் வேண்டியுள்ளார்.


இதனை நம்பி அனைவரும் தூரமான இடத்துக்கு புகைப்படம் எடுத்து விட்டு மீண்டும் திரும்பி வந்துள்ளனர்.


இச்சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு காய்ச்சலுடன் உடம்பு உஷ்ணம் அதிகரிக்கவே வைத்தியரிடம் அழைத்து சென்ற போது குழந்தையின் பெண் உறுப்பு பகுதி கடுமையாக சிவந்து இருந்ததாகவும், சந்தேகம் மேலோங்கவே குழந்தையின் உதடுகளில் மட்டுமன்றி முகத்திலும் சிறிய ,கீறல்கள் உள்ளதை வைத்தியர்கள் அவதானித்துள்ளனர்.


இதன் பின் நடத்தப்பட்ட வைத்திய பரிசோதனையின் போது குழந்தை மீது பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று அலுபோமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இரத்தினபுரி நிருபர்

No comments

Powered by Blogger.