பங்களாதேஷில் புதிய வன்முறை, 13 பொலிஸ் அதிகாரிகளுடன், 76 பேர் கொலை
ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டாக்கா மற்றும் வடக்கு மாவட்டங்களான போகுரா, பாப்னா மற்றும் ரங்பூரிலும், மேற்கில் மகுராவிலும், கிழக்கில் கொமிலாவிலும், தெற்கில் பாரிசல் மற்றும் ஃபெனியிலும் இறப்புகள் காவல்துறை மற்றும் மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டன.
வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வலுத்துவருகின்றது.
வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை வங்கதேச அரசு அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை காலை ஆளும் அவாமி லீக் அரசு ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்துக்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவாமி லீக், சத்ரா லீக், ஜூபோ லீக் செயற்பாட்டாளர்கள் போராட்டக்காரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வன்முறை வெடித்தது.
Post a Comment