Header Ads



கொலைக் கார் கண்டுபிடிப்பு, கோடீஸ்வரரின் மனைவிக்கு அவசர சத்திரசிகிச்சை


அத்துருகிரியில் இன்று -08-  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் மனைவியும் காயமடைந்துள்ளார்.


அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.


இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது குறித்த இடத்தில் அவரது மனைவியும் இருந்துள்ளார்.


காயமடைந்த பெண்ணுக்கு தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டார்.


அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இன்று (08) காலை 10 மணி அளவில் அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகுகலை நிலைய திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற 'கிளப் வசந்த' மற்றும் 38 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.


இவர்கள் கொழும்பு 7 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.