Header Ads



புத்தளம் மாவட்ட இணைப்பாளராக இர்ஷாத் றஹ்மத்துல்லா


 ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மத்திய செயற்குழுவினால் இர்ஷாத் றஹ்மத்துல்லாவின் பெயர் மேற்படி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


சமாதான நீதவானான இர்ஷாத் றஹ்மத்துல்லா சிரேஷ்ட ஊடகவியலாளர் என்பதுடன்,கடந்த 30 வருடங்களுக்கு மேல்,வானொலி,தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை துறையில் செய்தியாளராக பணியாற்றிவந்துள்ளார்.


இலங்கை நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் ஊடகத் துறை கற்கை நெறியினை பயின்ற இவர்,போருட் நிறுவனத்தின் வழிகாட்டலில் கொழும்பு பல்கலைக்கழத்தின் மனித வளம் தொடர்பிலான கற்கையினையும் நிறைவு செய்துள்ளார்.


இலங்கையின் சூரியன் வானொலியின் புத்தளம் செய்தியாளாராக பணியாற்றிய காலத்தில் நேரடி செய்தியாளராக களத்தில் இருந்து செய்திகளை வழங்கிய ஒரு செய்திளாராக இவரை அறிமுகப்படுத்த முடியும்.


இதனை கடந்து முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் ஊடக செயலாளராக மற்றும் இணைப்பு செயலாளராக பல்வேறு அமைச்சுக்களில் பணியாற்றிய இர்ஷாத் றஹ்மத்துல்லா,மேடை அறிவிப்பாளராகவும்,மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


தமது காலத்தில் பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளில் சீனா,வியட்நாம்,துருக்கி,இந்தியா,போன்ற நாடுகளில் இடம் பெற்ற வர்த்தக கருத்தரங்குகளிலும் கலந்து கொண்ட அனுபவத்தையும் கொண்டவர்.


மும்மொழிகளிலும் திறமை கொண்ட இவர் இந்தியாவினை தளமாகக் கொண்டு இயங்கும் தகிரேட் இந்தியா நியூஸ் இணையத்தினதும்,பத்திரிகையினதும் இலங்கை பிராந்தியத்திற்கான பிரதம ஆசிரியராகவும்,கலைஞர் தொலைக்காட்சியின் இலங்கை செய்தியாளராகவும் பணியாற்றிவருகின்றார்.


சமூக சேவைத்துறையில் அளப்பறிய பங்களிப்பினை செய்துவந்துள்ள இர்ஷாத் றஹ்மத்துல்லாவின் சேவையினை பாராாட்டி வவுனியா நகர மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் தேசமான்ய கௌரவம் வழங்கப்பட்டதுடன்,அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசமாநாட்டு ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்ற INTERNATIONAL HUMAN RIGHTS GLOBAL MISSION அமைப்பின் MAN OF NATION 2024-SRI LANKA நிகழ்வில் சமூக சேவைகள்,சமூக அபிவிருத்தி.மனித உரிமை பாதுகாப்பு மற்றும் இன ஒற்றுமைக்கான,சமூக பண்புடன் கூடிய தலைமைத்துவம் என்பனவற்றுக்கான விருதினையும் பெற்றுக் கொண்டார்.


புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் பழைய மாணவரான இர்ஷாத் றஹ்மத்துல்லா ஓய்வு பெற்ற அதிபர் செய்யது றஹ்மத்துல்லா மரைக்கார் மற்றும் மர்ஹூம் உம்மு சுலைஹா ஆகியோரின் புதல்வருமாவார்.


இர்ஷாத் றஹ்மத்துல்லாவினை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளராக நியமனம் செய்தமைக்கு அதனது தலைவர் என்.எம். அமீன் உட்பட மத்திய செயற் குழுவினருக்கும் எமது புத்தளம் மக்கள் நன்றி தெரிவிப்பதுடன்,தொடர்ந்தும் எமது ஊடக பணியின் பாதுகாப்புக்கு இர்ஷாத் றஹ்மத்துல்லாவின் பணி தொடர வாழத்துகின்றோம்.


-      புத்தளம் மாவட்ட தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பு

No comments

Powered by Blogger.