Header Ads



ஞானசாரர் தொடர்பில் முஸ்லிம், அமைப்புகள் எடுத்துள்ள தீர்மானம்


இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் அவம­தித்த குற்­றச்­சாட்டில் நான்கு வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள பொது பலசேனாவி­ன் பொதுச் செய­லாளர் கல­­கொட அத்தே ஞான­­சார தேர­ருக்கு மன்­னிப்பு வழங்­கு­மாறு சிபா­ரிசு செய்­வ­தில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தலை­மை­யி­லான முஸ்லிம் அமைப்­புகள் தீர்­மா­­னித்­துள்­ளன. இது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று முன்­தினம் தெஹி­வளை ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற போதே இத்­தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ள­து.


அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற இக் கூட்­டத்தில் முஸ்லிம் சிவில் அமைப்­புகள் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என பலரும் கலந்து கொண்­ட­னர்.


இதன்­போது சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் ஞான­சார தேர­ரு­க்கு ஜனா­தி­பதி மூலம் பொது மன்னிப்புப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான சிபா­ரிசுக் கடி­தத்தை வழங்­கு­மாறு பெளத்த அமைப்­புகள் விடுத்துள்ள வேண்­டுகோள் குறித்து விரிவாக ஆராயப்­பட்­டது. இந்த வேண்­டு­கோளின் சாதக பாத­கங்கள் மற்­றும் இது விட­யத்தில் முஸ்லிம் சமூகம் தலை­யி­டு­­வதில் உள்ள அபா­யங்கள் குறித்து இக் கூட்­டத்தில் கலந்து கொண்­ட­வர்கள் தமது கருத்­துக்­களை முன்­வைத்­த­னர்.


இந்­­நி­லை­யிலேயே இது விட­யத்­தில் முஸ்லிம் சமூகம் எந்­­த­வொரு நிலைப்­பாட்­டையும் முன்­வைப்­ப­தில்லை என்றும் கோரப்­பட்ட சிபா­ரிசுக் கடி­தத்­தை வழங்­கு­வ­தில்லை என்றும் ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­ட­து.


இக் கூட்­டத்தின் பின்னர் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹாலிக் ஊடகங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­ல், ஞான­சார தேர­ருக்கு மன்­னிப்பு வழங்கும் அதி­காரம் எமது கைகளில் இல்லை. அதனை ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும். சமூக வலைத்­த­ளங்­களில் முன்­கொண்டு செல்லப்­படும் பிர­சா­ரங்­களில் உண்மை இல்லை. இந்த விட­யத்தில் உலமா சபை தன்­னிச்­சை­யாக தீர்­மானம் எடுக்­காது” என்­றார்.

அத்­துடன் ஞான­சார தேர­ருக்கு மன்­னிப்பு வழங்­கு­வ­தற்கு உலமா சபை தீர்­மா­னித்­துள்­ள­தாக சமூக வலைத்­த­ளங்­களில் பகி­ரப்­பட்ட செய்­தி­க­ளை­யும் அவர் நிரா­­க­ரித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. – Vidivelli

No comments

Powered by Blogger.