Header Ads



சுவிற்சர்லாந்தில் இலங்கையர் படுகொலை


இலங்கையின் - நீர்கொழும்பில் பிறந்தவரும்,  சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வசித்து வந்தவருமான, 2 பிள்ளகைளின் தந்தையான மொஹமட் றிஸ்வி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


 இவரது தந்தையின் பெயர் மொஹமட் ராசிக்.


அவரது வீட்டில் வைத்தே, குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டனர்.


படுகொலை செய்யபட்டவரின் ஜனாஸா, தற்போது ஜெனீவா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


கொலை எப்படி நிகழ்ந்தது, எதற்காக  இடம்பெற்றது, எப்போது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் என்ற மேலதிக விபரங்கள் வெளியாவில்லை.


அவரது மறைவையிட்டு, பிரஞ்சு மொழியில் வெளியான ஒரு அனுதாபத் தகவலையே, மேலே காண்கிறீர்கள்.


No comments

Powered by Blogger.