Header Ads



நிசாம் காரியப்பரின் 'அந்த கல்முனைக்குடி நாட்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  நிசாம் காரியப்பரின்  ‘அந்த கல்முனைக்குடி நாட்கள்'   எனும் கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 20.07.2024  பி.ப. 3.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) லோட்டஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


நிகழ்வில் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் ஓய்வு பெற்ற வெளிநாட்டு அமைச்சின் அதிகாரியும் இலங்கைக்கான  முன்னாள் தூதுவருமான எச்.ஏ. அஸீஸ் அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்  அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 


முனீரா அபூபக்கர்

2024.07.16

No comments

Powered by Blogger.