நடு வீதியில் தீ பற்றிய கார்
பாணந்துறையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கார் ஒன்று கினிகத்தேனை - தியகல பிரதேசத்தில் இன்று (20) திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த காரில் 5 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவல் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து முற்பகல் 11 மணிமுதல் சுமார் ஒரு மணிநேரம் முற்றாக நிறுத்தப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீயை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கடுமையாக முயன்றும் கார் முற்றிலும் தீக்கிரையானது.
Post a Comment