Header Ads



நடு வீதியில் தீ பற்றிய கார்


பாணந்துறையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கார் ஒன்று கினிகத்தேனை - தியகல பிரதேசத்தில் இன்று (20) திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது குறித்த காரில் 5 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


தீப்பரவல் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து முற்பகல் 11 மணிமுதல் சுமார் ஒரு மணிநேரம் முற்றாக நிறுத்தப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தீயை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கடுமையாக முயன்றும் கார் முற்றிலும் தீக்கிரையானது. 

No comments

Powered by Blogger.