Header Ads



“தூண்டில்கள் துடிக்கின்றன” கவிதை நூல் வெளியீட்டு விழா (படங்கள்)

- இஸ்மதுல் றஹுமான் -


கம்மல்துறை கவிஞர்களின் 100 கவிதைகள் தொகுக்கப்பட்ட “தூண்டில்கள் துடிக்கின்றன” கவிதை நூல் வெளியீட்டு விழாவும், கவியரங்கும்  ஞாயிற்றுக்கிழமை  கம்மல்துறை அல்-பலாஹ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில்    கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கலா பூஷணம் எம். ஜே. எம். தாஜுதீன் தலைமையில் கவிஞர் போருத்தொட்ட ரிஸ்மி அரங்கத்தில் நடைபெற்றது.


பிரதம அதிதியாக ஓய்வு நிலை தேர்தல் ஆணையாளர் நாயகமும், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான  எம். எம். மொஹமட் (நளீமி) கலந்து கொண்டு நூலின் முதல்  பிரதியை தலைவரிடம் பெற்றுக்கொண்டு வெளியிட்டு  வைத்தார்.  


அதிதிகளாக கலந்துகொண்ட  தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர். தே. செந்தில் வேலவர்  ஒலிபரப்பாளருமான அஷ்ரப்  சிஹாப்தீன், வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கலா பூஷணம், கவிமணி என். நஜ்முல் ஹுசைன்,  சிரேஷ்ட ஊடகவியலாளரும்  ‘ஈழத்து நூன்’ கலா பூஷணம் எம். ஏ. எம். நிலாம் கம்மல்துறை அல்-பலாஹ் கல்லூரியின் அதிபர் எம். யு. பாயிஸ் (நளீமி),  பலகத்துறை பெரிய பள்ளிவாசல் தலைவர் எம் முஹம்மத் ஆகியோர்கள் சிறப்புப் பிரதிகளை பெற்றுக்கொண்டார்கள்.  கவிஞர்கள் பலரும் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.








No comments

Powered by Blogger.