Header Ads



ஜனாதிபதி தேர்தலை தடுக்கக்கோரி, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்


ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி, வர்த்தகர் ஒருவர் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 


குறித்த மனுவானது, தொழிலதிபர் சி.டி. லீனாவ என்பவராலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், இது தொடர்பில் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரையில், தற்போது திட்டமிடப்பட்ட காலத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு அவரது மனுவில் கோரப்பட்டுள்ளது.

1 comment:

  1. பெரிய சூழ்ச்சிக்காரனின் மற்றொரு சூழ்ச்சி இது. அதற்கான அட்டோர்னி ஜெனரலும் நியமிக்கப்பட்டுவிட்டார்.இனி பெரிய சூழ்ச்சியின் ஒவ்வொரு கட்டங்களையும் நாடகங்களின் ஒவ்வொரு திருப்பத்தையும் காணமுடியும்.

    ReplyDelete

Powered by Blogger.