Header Ads



சஜித்திற்கும், அநுரகுமாரவிற்கும் அழைப்பு விடுத்து ரணில் கூறிய விடயங்கள்


 அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது


நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அரசியல் உருவாக்கப்பட வேண்டும்


இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கின்றேன்


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பொருளாதாரம், அரசாங்கம் இல்லாத நாட்டையே நான் பொறுப்பேற்றேன்


எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றியுள்ளேன்.


நான் எப்போதும் எனக்காக அன்றி நாட்டுக்காகவே செயற்பட்டேன்


இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தப் பயணத்தை தொடர்வேன்


- "ஒன்றாக வெல்வோம்  - நாம் கம்பஹா " பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் முன்மொழிவை, கம்பஹா மாவட்ட மக்கள் ஏகமனதாக வழிமொழிந்தனர்.


அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் உட்பட 250 முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிட வேண்டும் என்ற முன்மொழிவை கம்பஹா மாவட்ட மக்கள் ஏகமனதாக உறுதிப்படுத்தினர்.


அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியலை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரை இப்பயணத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.


"ஒன்றாக வெல்வோம்  - நாம் கம்பஹா " என்ற தொனிப்பொருளில் இன்று (21) கடவத்தை பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.