Header Ads



பொதுஜன பெரமுன முதிர்ச்சியற்ற தீர்மானம் - ராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு


இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவளிக்கவுள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார்.


தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரமித்த பண்டார தென்னக்கோன் இதனைப் பதிவிட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு முதிர்ச்சியற்ற தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, மிக முக்கியமான நேரத்தில் நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதி ரணிலை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் தொடர்ந்தும் ஆதரவளிக்கவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.