Header Ads



கட்டணத்தை குறைக்க முடியாதென அடம்பிடிப்பு

பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும், முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், மாதம் ஒருமுறை எரிபொருள் விலையை திருத்தும் போது கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர்  லலித் தர்மசேகர தெரிவித்தார்.  


மக்களை ஏற்றிச் செல்லும் இரண்டு இலட்சம் முச்சக்கர வண்டிகளில் கூட இதுவரை கட்டண மீற்றர் பொருத்தப்படவில்லை எனவும், ஓரிரு ரூபாய்க்களில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும் மக்களுக்கு அதன் பலனை வழங்குவதற்கான முறைமையை அரசாங்கம் தயாரிக்கவில்லை எனவும்  தர்மசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.