Header Ads



துருக்கியின் போர்க் கப்பல் இலங்கைக்கு வந்தது


துருக்கி குடியரசின் கடற்படைக்கு செந்தமான TCG Kinaliada கப்பல், கொழும்பு துறைமுகத்​தை வந்தடைந்துள்ளது.


152 கடற்படையினருடன் இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக கடற்படை பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். 


குறித்த கப்பல் இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் கடற்படையினர் நாட்டின் முக்கிய சில இடங்களை பார்வையிடவுள்ளனர். 


அதன் பின்னர் மேற்கு கடற்படை கட்டளை பிரிவிற்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் அவர்கள் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளனர். 


இந்த கப்பல் 11ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது.

No comments

Powered by Blogger.