Header Ads



தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை இன்று இலவசமாக பார்வையிட வாய்ப்பு


தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை இன்று இலவசமாக பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த வாய்ப்பு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் 88வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


62 ஏக்கர் நிலப்பரப்பில் விசாலமான மிருகக்காட்சிசாலையானது 1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.


தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 220 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலங்கினங்கள் கண்காட்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.