Header Ads



அரச அச்சகத்திற்கு விசேட பாதுகாப்பு


இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆவணங்களை அச்சிடும் அரச அச்சகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


அத்துடன் அரசு அச்சகத்தின் பாதுகாப்பிற்காக தனி பொலிஸ் காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அரசு அச்சகத்தின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அச்சகத்துக்கு சென்றிருந்தது.


அதேவேளை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி திருமதி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்  

No comments

Powered by Blogger.