சுவிஸ் பாராளுமன்றம் தெரிவான இலங்கையைச் சேர்ந்த, முதல் அரசியல்வாதி பராஹ் ரூமியுடன் அலிசப்ரி சந்திப்பு
சுவிஸ் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த முதலாவது அரசியல்வாதியான பராஹ் ரூமியுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இன்று வியாழக்கிழமை, 25 ஆம் திகதி கொழும்பில் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இதன்போது, அதிகாரப் பகிர்வுக்கான சுவிஸின் அணுகுமுறை மற்றும் இலங்கையில் நடந்து வரும் நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய விடயங்களும், இலங்கையின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் ஊடாக இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை பாரம்பரியத்தைச் சேர்ந்த சுவிஸ் பிரஜைகளை ஈடுபடுத்துவதற்கான உத்திகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கைக்கான, சுவிஸ் தூதுவரும் பங்கேற்றுள்ளார்.
Post a Comment